நினைத்துப் கூடப் பார்க்க முடியவில்லை
உங்கள் வீரத்தினை...
நெஞ்சு வெடிக்கும் போல் உள்ளது
உங்கள் துணிவை நினைக்கும் போது…..
கவிதை கூட எழுத முடியவில்லை
கண்மணிகள் உங்கள் வீரத்தின் முன்னால்…
உயிரிலும் மேலானது ஈழம் என்பதை
உங்கள் உயிராயுததால் மரியாதை செலுத்துகின்றீர்கள்
விடை பெறும் வேளையில் கூட நாம்
கலங்கக்கூடாதுஎன்பதற்காக புன்னகைக்கும்
புன்னகை வீரர்களே...
கரும் புலி வீரர்களே மாவீரர்களே - நீங்கள்
மலரப்போகும் ஈழத்தின் விடிவெள்ளிகளாக
ஈழத்தாயின் அக்கினிக் குழந்தைகளாக
என்றென்றும் உங்கள் ஈழத்தில்
உங்கள் உறவுகள் மனங்களில் வாழ்வீர்கள்…
மதுசிகா
யாழ்பாணம்
*****
for contact: s.jeeva@hotmail.fr

No comments:
Post a Comment