Wednesday, October 1, 2008

<< ஏழைத் தாய் >>



ஓலைக் குடிசை ஒன்றில்
ஏழைத் தாய் ஒருத்தி
ஊள்ளிருந்தே பிள்ளைக்கு
உணவூட்டினாள்

திடீரென மழை பெய்தது
கலக்கமடைந்த அந்த தாய்
தன்னையே கூடாரமாக்கினாள்
தன் பிள்ளைக்காக

ஆனாலும் பிள்ளை நனைந்தது
மழை நீரால் அல்ல

அவ் ஏழைத் தாயின் கண்ணீரால்…….
_
சி.ஜீவா
வத்திரான்
*****
for contact: s.jeeva@hotmail.fr

No comments: